Tuesday, February 07, 2006

4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும்

கந்தர் கலிவெண்பா
********************

4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வுங்
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்குந்
தந்திரத்திற் சாராது சார்வதுபோன் - முந்துங்

போக்குவரவு = இறப்பு, பிறப்பு
புணர்வு = பற்றுடைய சம்பந்தம்
காரணம் = தனக்கொரு மூலம்
தாரணி = உலகு
இந்திரசாலம் = செப்படி வித்தை, ஜாலவித்தை
தந்திரம் = வழி, உபாயம்

குறைவு இல்லாத பூரணமான பொருளே!
"பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்."
(உலகில் உள்ள பொருட்கள் போல்) மாற்றம் இல்லாததாய், போதல், வருதல், சேர்தல் , பிரிதல் இல்லாத ஆதாரப் பொருளே!. இவ்வுலகில் இந்திரஜால வித்தை செய்பவன், எல்லோரையும் மயக்குகின்ற தந்திரத்திலே தான் மயங்காது, அதன் சார்பாய் நின்று தொழில் செய்வது போல, தனக்கு ஒரு முதற்காரணம் இல்லாமல், தானே முதற்காரணமாகச் சார்ந்து நிற்பவனே!


0 Comments: