கந்தர் கலிவெண்பா
********************
4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வுங்
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்குந்
தந்திரத்திற் சாராது சார்வதுபோன் - முந்துங்
போக்குவரவு = இறப்பு, பிறப்பு
புணர்வு = பற்றுடைய சம்பந்தம்
காரணம் = தனக்கொரு மூலம்
தாரணி = உலகு
இந்திரசாலம் = செப்படி வித்தை, ஜாலவித்தை
தந்திரம் = வழி, உபாயம்
குறைவு இல்லாத பூரணமான பொருளே!
"பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்."
(உலகில் உள்ள பொருட்கள் போல்) மாற்றம் இல்லாததாய், போதல், வருதல், சேர்தல் , பிரிதல் இல்லாத ஆதாரப் பொருளே!. இவ்வுலகில் இந்திரஜால வித்தை செய்பவன், எல்லோரையும் மயக்குகின்ற தந்திரத்திலே தான் மயங்காது, அதன் சார்பாய் நின்று தொழில் செய்வது போல, தனக்கு ஒரு முதற்காரணம் இல்லாமல், தானே முதற்காரணமாகச் சார்ந்து நிற்பவனே!
Tuesday, February 07, 2006
4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும்
Posted by ஞானவெட்டியான் at 3:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment